tamilnadu

img

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு

ஆசிய தடகள போட்டியில் 800 கி.மீ ஓட்டத்தில் தங்கம் வென்று தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துவிற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தோஹா ஆசிய தடகளப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து(30), 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இந்தத் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான். ஏற்கெனவே, தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 2.02.70 நிமிடங்களில் இலக்கை எட்டி சாதனை படைத்தார். இந்நிலையில் இன்று தமிழகம் திரும்பி கோமதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய கோமதி தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று தங்கம் வெல்வேன் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் முதல் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவை வரவேற்க விளையாட்டுத்துறை அமைச்சரோ அல்லது மற்ற அமைச்சர்களோ விமான நிலையத்திற்கு செல்லவில்லை என்பது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


;